விளாத்திகுளம், மே 06 –
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமளிநகர் பகுதியில் சேர்ந்த பேஸ்கி பர்ணாந்த் என்பவரின் மகன் திலேத்குமார் (52). இவர் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில் உள்ள தனது நண்பர் ஒருவருடன் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 27-03-2026 அன்று வீட்டில் உள்ள அனைவரும் சர்ச்சுக்கு சென்ற நிலையில், திலேத்குமாரின் நண்பரின் 16 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கிருந்த திலேத்குமார் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மீனவர் திலேத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



