தென்தாமரைகுளம், மார்ச் 12 –
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டிலான சாலை மேம்பாடு பணிகளை பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலருமான தா.ஆதிலிங்க பெருமாள், பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரேம் ஆனந்த், குறமகள், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாலை மேம்பாட்டுப் பணிகளை பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன் தொடங்கி வைத்தார்.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலர் பா.பாபு கலந்து கொண்டார். அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீ தேவி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் தங்கரதி, முன்னாள் மாணவர் பேரவை தலைவர் செல்வ சுப்பிரமணியன், அகஸ்தீசுவரம் சி எஸ் சபை போதகர் கிதியோன் மற்றும் திமுக நிர்வாகிகள் விஜய கங்காதரன், தமிழன் ஜானி, அகஸ்தியலிங்கம், லிங்கம், அருள் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேரூராட்சி 13- ஆவது வார்டுக்குள்பட்ட அகஸ்தீசுவரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரேயுள்ள சாலை, அரசுத் தொடக்கப்பள்ளி எதிரேயுள்ள சாலை, உஜ்ஜைனி மாகாளியம்மன கோயில் தெரு மற்றும் 3 – வார்டுக்குட்பட்ட வடக்கு வடுகன்பற்று அகஸ்தீசுவரர் ஆலய மேலத்தெரு ஆகிய பகுதிகளில் தலா ரூ. 9 லட்சம் வீதம் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் அடங்கும்.



