மார்த்தாண்டம், ஏப். 1 –
குமரி மாவட்டம் கேரள எல்லை பகுதியான பளுகல் அருகே தேவிகோடு பகுதியை சேர்ந்தவர் பினுகுமார். இவருக்கு அதே பகுதியில் குட்டப்பன்பிள்ளை சன்ஸ் என்ற பெயரில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் கேரள அழகிகளை வைத்து விபச்சார தொழில் நடந்து வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் ஒரு பெண்ணுடன் 4 ஆண்கள் தங்கி இருந்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலிசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில் அந்த பெண் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ராணி என்பதும், ஆண்கள் 4 பேரும் முள்ளங்கினாவிளையை சேர்ந்த கிங்ஸிலி (45), சிதறால் பகுதியை சேர்ந்த ஜெனீஷ் (25), மாத்தூர் பகுதியை சேர்ந்த கிரண்குமார் (30), அருமனை பகுதியை சேர்ந்த சுபிமோன் (27) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் ஆண்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்ததோடு ராணியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ள விடுதி உரிமையாளர் வினு குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


