தருமபுரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 53 -வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.எஸ்.ஆர்.வெற்றிவேல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தலைமை தாங்கினார். பூக்கடை ரவி நகர கழக செயலாளர் வரவேற்புரை ஆற்றினார். நீலாபுரம் செல்வம், சிவபிரகாசம், பழனி, வேலுமணி ஆகியோர்முன்னிலை வகித்தனர். கே. பி. அன்பழகன் தருமபுரி மாவட்ட கழக செயலாளர், பி.வி.ஆர்.ராஜ் சத்யன் கழகத் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர், பா. தில்லை செல்வம் தலைமை கழக பேச்சாளர், கே. சிங்காரம் கழக அமைப்புச் செயலாளர் ,டி.ஆர். அன்பழகன் பால்வளத் தலைவர், ஏ. கோவிந்தசாமி பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ,வி. சம்பத்குமார் அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். எம். கோவிந்தசாமி மாவட்ட செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு நன்றி உரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர,பேரூர், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.



