திருச்சி, ஜூன் 1 –
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தில் சகாதேவன் என்பவரது மகன் மாதவன், குடிபோதையில் தனது வீட்டிற்கு தீ வைத்தார். இந்த தீ விபத்தில் பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் மற்றும் அரசு ஆவணங்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. தகவல் அறிந்த லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபு தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



