நாகர்கோவில், ஜூன் 19 –
நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்தவர் பிரபு என்கிற சொர்ண பிரபு (34). கார் டிரைவர். நேற்று இரவு ஊட்டுவாழ் மடம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென பிரபுவை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டது. அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரபுவை சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கால், உடல் உள்ளிட்ட பகுதிகளில் பிரபுவுக்கு பலத்த ஏற்பட்டது. உடனே அந்த கும்பல் ஒடி விட்டது. பிரபு அந்த இடத்தில் சரிந்தார்.
படுகாயம் அடைந்த பிரபுவை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தற்போது அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு பிரபு ஊட்டுவாழ்மடம் பகுதியில் சென்றபோது, அங்கு சில சிறுவர்களும் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அதனை பிரபு தட்டி கேட்டதால் இருதரப்புக்கம் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரபு அந்த சிறுவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சிறுவர்கள் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து பிரபுவை அறிவாளால் வெட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


