தூத்துக்குடி, மே 5 –
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் திமுக மற்றும் தவெக தலா 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக மற்றும் முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரு கட்சிகளும் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்று சம பலத்துடன் உள்ளன.
அதிர்ச்சித் தோல்விகள்:
வெற்றி பெறுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் முக்கியத் தலைவரான பி. கீதா ஜீவன் தூத்துக்குடி தோல்வியடைந்தார். அதேபோல், அதிமுகவின் மூத்த தலைவர்களான கடம்பூர் செ. ராஜு கோவில்பட்டி மற்றும் எஸ்.பி. சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் ஆகியோரும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
புதியவர்களின் வருகை:
தவெக சார்பில் முதன்முறையாகக் களம் கண்ட ஸ்ரீநாத், மதன்ராஜ் மற்றும் சரவணன் ஆகியோர் தங்களது முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ளனர். மேலும், கோவில்பட்டியில் திமுக சார்பில் முதல்முறையாகப் போட்டியிட்ட கா. கருணாநிதி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
கடும் போட்டி:
திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையின் போது திமுக மற்றும் தவெகவினரிடையே மிகக் கடும் இழுபறி நிலவியது குறிப்பிடத்தக்கது.
தொகுதி வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி முன்னிலை நிலவரம்
தூத்துக்குடி ஸ்ரீநாத் தவெக முதல் சுற்றில் இருந்தே முன்னிலை பெற்று வெற்றி. திருச்செந்தூர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் திமுக தொடர்ந்து 7வது முறையாக வெற்றி பெற்று சாதனை. கோவில்பட்டி கா. கருணாநிதி கோவில்பட்டி தொகுதியில் தொடர்ந்து அதிமுக கோட்டையாக விளங்கிய இடத்தில் திமுக கட்சி சார்பில் முதல் முறையாக போட்டியிட்டு முதல் வெற்றி.
விளாத்திகுளம் ஜி.வி. மார்க்கண்டேயன் திமுக கடும் போட்டிக்கு இடையே வெற்றியைத் தக்கவைத்தார். ஓட்டப்பிடாரம் மதன்ராஜ் தவெக முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி.
ஸ்ரீவைகுண்டம் சரவணன் தவெக கடும் இழுபறிக்குப் பின்னே வெற்றியை பதிவு செய்தார்கள்.



