திருச்சி, ஜூன் 13 –
திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி பாதுஷா கடந்த 6ஆம் தேதி காட்டூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே சூர்யா, குமார், பிரசாத் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்த தீபக் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



