பேச்சிப்பாறை, ஜூலை 04 –
பேச்சிப்பாறை அருகே தச்சமலை, பின்முட்டுதேரி, களப்பாறை ஆகிய மூன்று மலை கிராமத்தில் இருந்து பேச்சிப்பாறை அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றால் அணையை கடந்து படகில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையை தவிர்க்க பேச்சிப்பாறை ஊராட்சி சார்பாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் படகு ஒன்று வழங்கப்பட்டது. ஆனால் அந்த படகு மூலம் சில நாட்கள் மட்டும் பள்ளி செல்ல முடிந்துள்ளது. தற்போது பல மாதங்களாக அந்த படகு இயக்கப்படாமல் நிறுத்தி விடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி தச்சமலை ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



