குளச்சல், ஜூன் 4 –
புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ஜலஸ்டின் மகன் ஜெர்சின் (33). இவர் லண்டனில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2025ம் ஆண்டு ஜெர்சினுக்கும் ராமன்துறை பகுதியைச் சேர்ந்த ஜெரிஷா (24) என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது 42 பவுன் நகைகள், ரொக்கம் ரூ.15 லட்சம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்ததும் ஜெரிஷாவை லண்டன் அழைத்து செல்வதாக கூறி விட்டு, ஏதோ பல காரணங்களை கூறி ஜெர்சின் மட்டும் தனியாக லண்டனுக்கு சென்றுள்ளார்.
இதை அடுத்து சில காலம் மனைவி ஜெரிஷாவுடன் போன் மூலம் பேசி வந்துள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஜெர்சின் போக்கில் மாற்றம் தெரிய தொடங்கியுள்ளது. அவர் மனைவியுடன் போனில் பேசுவதை தவிர்த்து உள்ளார். ஜெரிஷா மற்றும் அவரது குடும்பத்தினர் யார் போன் செய்தாலும் ஜெர்சின் போன் எடுத்துப் பேசாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து ஜெரிஷா குடும்பத்தினர் லண்டனில் தங்களுக்கு தெரிந்த நபர்கள் மூலம் விசாரித்துள்ளனர். அப்போதுதான் லண்டனில் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜெர்சின் இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெரிஷா பலமுறை கணவரை தொடர்பு கொள்ள முயன்றும் பேச முடியவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஜெரிஷா குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகார் தெரிவித்து பல நாட்கள் கடந்தும் உரிய நடவடிக்கை இல்லாததால், அவர் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட எஸ் பி ஸ்டாலின் இளம்பண்ணை ஏமாற்றி திருமணம் செய்த ஜெர்சின் மீது விசாரித்து நடவடிக்க குளச்சல் மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதை அடுத்து குளச்சல் போலீசார் முதல் திருமணம் நடந்ததை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஜெர்சின் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை ஜெலஸ்டின், தாய் மேரி ஹெலன் மற்றும் குடும்பத்தினர் ஜெஸ்லி, வனிதா என்ற பிரமி (41), லெனின் (46), டெல்லிஸ் மேரி (65) என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


