தருமபுரி, ஆகஸ்ட் 23 –
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தினத்தை முன்னிட்டு 21/8/2025 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் தருமபுரி பாரம்பரிய சிலம்ப பயிற்சி பள்ளியின் மாணவி பிரியதர்ஷினி மாவட்ட அளவில் இரட்டைக் கம்பு வீச்சில் (Under 19) பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் பிரியதர்ஷினி மாநில போட்டிக்கு தகுதி பெற்றதை தொடர்ந்து சிலம்ப பயிற்சி பள்ளியின் ஆசிரியர் முருகன் மற்றும் மாணவியின் பெற்றோர்கள், பொதுமக்கள் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



