தென்தாமரைகுளம், மார்ச் 27 –
கரும்பாட்டூர் ஊராட்சியில் சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு முகாமில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அசுபதி தலைமையில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மேலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கம், செல்பி பாய்ன்ட், பேரணி, பரமபத விளையாட்டு நடைபெற்றது. இந்நிகழ்வில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேல்முருகன், ஊராட்சி செயலர் காளியப்பன், மகளிர் திட்ட பொறுப்பாளர் சந்திரா, ஏசு அனுஷா பாய், சுய உதவி குழு கூட்டமைப்பு பொறுப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



