By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் திறந்தவெளியில் அழிந்து வரும் நெல்: பாதுகாக்கப்படும் டாஸ்மாக் பொருட்கள் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் திறந்தவெளியில் அழிந்து வரும் நெல்: பாதுகாக்கப்படும் டாஸ்மாக் பொருட்கள் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் திறந்தவெளியில் அழிந்து வரும் நெல்: பாதுகாக்கப்படும் டாஸ்மாக் பொருட்கள் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Last updated: March 18, 2026 3:35 pm
March 18, 2026
43 Views
Share
SHARE

நாகர்கோவில், மார். 18 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடி முடிந்து, நெல் அறுவடை நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு மாநிலம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையம் அமைத்திருப்பது போன்று குமரி மாவட்டத்திலும் 10 நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது.

ஆனால் குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று, நான்கு வாரங்களாக அறுவடை செய்யப்பட்டு, அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்வதற்கு பதிலாக தட்டிக்கழித்து கொள்முதல் செய்யாமல் அலைக்கழித்து, விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக, விவசாயிகளால் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்ட நெல் மலைபோல் நிலையங்களுக்கு உள்ளேயும், வெளியே சாலையிலும், அருகிலுள்ள காட்டுப்புறங்களிலும், மண்தறையிலும், திறந்த வெளியிலும் கொட்டப்பட்டு சேதமடைந்து வருகிறது. மேலும், தார்ப்பாய் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால் விலங்குகளால் சேதமடைந்தும், மழையில் அழிந்து முளைவிட்டும் வருகிறது.

ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய தொகையைக்கூட பெரும்பாலான விவசாயிகளுக்கு உடனே வழங்காமல் இழுத்தடித்து மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் செண்பகராமன்புதூர் உள்ளிட்ட நெல் கொள்முதல் நிலையங்களை நேரில் பார்வையிட்டு உண்மை நிலையை கண்டறிந்தனர்.

அதைத்தொடர்ந்து, ஒன்றிரண்டு தினங்களுக்குள் அனைத்து நெல்லையும் உடனே கொள்முதல் செய்வதுடன், தனியார் முதலாளிகளுடன் கூட்டு வைத்திருக்கக்கூடிய வேளாண்மைத்துறை மற்றும் நுகர்பொருள் வாணிபகழக ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு நெல்கொள்முதல் நிலையத்தில் போராட்டம் உடனே நடத்துவதென முடிவெடுத்துள்ளனர்.

இதற்கிடையில் செண்பகராமன்புதூர் நெல்கொள்முதல் நிலையத்தை ஒட்டியுள்ள ‘டாஸ்மாக் குடோனில்’ மதுபான ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்த மது வகைகளை பொக்கிஷம் போன்று பாதுகாத்து வாகனங்களில் ஏற்றி அரசு மரியாதையுடன் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் விவசாயிகள் விளைவித்த அமுதமான நெல்லை அவர்களிடமிருந்து கொள்முதல் செய்து அப்போதைக்கப்போது வாகனங்களில் ஏற்றி ‘சேமிப்பு கிடங்கிற்கு’ அனுப்பி வைப்பதற்கு பதிலாக தெருவில் சீரழிய விட்டுள்ளனர்.

ஆகவே, வருகிற 20/3/2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு செண்பகராமன்புதூர் நெல்கொள்முதல் நிலையத்தை ஒட்டி எதிரிலுள்ள ‘டாஸ்மாக் குடோனுக்கு’ வரும் மதுபான வாகனங்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

முகத்தில் வீசிய திரவத்தால் பரபரப்பு
கோவில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
வெயிலில் காயும் பூதப்பாண்டி தேர்
புதுக்கடை அருகே கூலி தொழிலாளி தூக்கில் இறந்த நிலையில் பிணம் மீட்பு
வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ஜுலை 9 ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்; ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

July 7, 2025
47 Views
மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம்
பளுகல் அருகே விபத்து; 10ம் வகுப்பு மாணவன் பிளஸ் 2 மாணவி படுகாயம்
குமரி மாவட்ட வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு : மரக்கன்றுகளை நட்ட மாணவர்கள்
குமரி கலெக்டர் அலுவலகத்தில்உயர் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account