கோவை, மார்ச் 23 –
கோவை மாவட்டம் ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் தமிழ்நாடு இலக்கியப் பேரவை சார்பாக கவிஞர் பொன்சிங் அவர்களின் ஆற்றோரத்தில் ஒரு அத்திமரம் நூல் வெளியிடப்பட்டது. விழாவிற்கு புலவர் பொன்முடி சுப்பையன் தலைமை தாங்கினார். திராவிட மணி வரவேற்புரை ஆற்றினார்.
புத்தகத்தை பாரதியார் பல்கலைக் கழக மேனாள் துணை இயக்குனர் சி. சித்ரா நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். முதல் பிரதியை விஜய் சண்முகம் பெற்றுக் கொண்டார். செ. துரைமுருகன். நூலைப்பற்றி ஆய்வுரையாற்றினார். கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் செயலர் தம்பிதுரை, கவிஞர் பொன்சிங்காரம் அவர்களின் இலக்கிய சேவையைப் பாராட்டி உரை நிகழ்த்தினார். கவிஞர் பொன்சிங்காரம் ஏற்புரையாற்றினார். சா. குமாரசாமி நன்றி உரையாற்றினார். இது குறித்து பொன் சிங்காரம் கூறுகையில், இப்புத்தகத்தில் அழகான காதல் இடம் பெற்றுள்ளது என்பதை குறிப்பிட்டார்.



