சென்னை, நவம்பர் 22 –
குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் உள்ள ஷிக்ஷா பப்ளிக் பள்ளியில் உலக பசுமை தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சுற்றுசூழலை பாதுகாக்க வலியுறுத்தி மழழை குழந்தைகளின் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. பேரணியை ஷிக்ஷா கல்வி குழுமத் தலைவர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. படிக்கும் பள்ளி மாணவர்கள் சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையை வலியுறுத்தி பச்சை நிற ஆடைகள் அணிந்தும், இலை, தளைகளை உடுத்தியும் பேரணியில் மழலை குழந்தைகள் கலந்து கொண்டது பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.
மேலும் எந்தந்த பிளாஸ்டிக் பொருட்களால் சுற்று சூழல் மாசு ஏற்படும் என்பதை விளக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களை உடலில் அணிந்து குழந்தைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதனை தொடர்ந்து நெகிழி தவிர்போம், சுற்று சூழலை பாதுகாப்போம் என கோஷங்களை எழுப்பி முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள் பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் பசுமையை ஒவ்வொருவரிடமும் வலியுறுத்தும் வகையில் வீடுவீடாக சென்ற குழந்தைகள் பழம் மற்றும் மரச்செடிகளுக்கான விதை பந்துகளை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் குழந்தைகளின் பேரணிக்கு குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்து குழந்தைகளை வரவேற்றனர்.



