கோவை, செப். 18 –
கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சி வார்டு எண் 9 முதல் 15 வரை உள்ள பொது மக்களுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் மண்ணீஸ்வரர் கோவில் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் இரா. பரமேஸ்வரன், குடிமை பொருள் தாசில்தார் ஜெயபாரதி, திமுக அன்னூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நா. பழனிச்சாமி, தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மு. தனபாலன், மன்னிஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து முதல் மனுவை பெற்று முகாமை துவக்கி வைத்தார்கள்.
இந்த முகாமில் உடன் பேரூராட்சி துணைத் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர்கள் சிற்பி ரங்கநாதன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் இருந்தனர். இதில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மகளிர் உரிமைத்தொகை பெற்று தர வேண்டி மனுக்களை அதிக அளவில் சமர்ப்பித்தனர். இந்த முகாமில் வருவாய் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட 17 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.



