திருவெண்ணெய்நல்லூர், டிச. 13 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே செம்மார் கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் தனது மனைவியுடன் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் கதவை உடைத்து அவரது மனைவி ரேவதி கழுத்தில் இருந்த தாலி செயினை அறுக்க முயன்றுள்ளார்.
அப்போது நவீன் குமார் மற்றும் உறவினர்கள் தடுக்க முயன்ற போது அவர்களை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்று பகுதியில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பதுங்கி இருந்தவர்களை பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவர்களை விசாரனை செய்ததில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மங்கலம்கொம்பு, காமனூர் கிராமம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (எ) பாண்டியன் என்பது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் (எ) பாண்டியன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கொடைக்கானலில் இருந்து செம்மார் கிராமத்திற்கு வந்து திருட முயன்ற சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



