சேலம், ஜுன் 29 –
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று இன்று (29.06.2026) நடைபெற்ற சேலம் மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதியோர் உதவி தொகை, இலவச வீட்டு மனை, பட்டா மாறுதல், சாதி சான்று, வேலைவாய்ப்பு, வங்கி கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதி உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 654 மனுக்கள் வர பெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகள் 13 பேர் மனுக்களை அளித்தனர்.
மேற்படி மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ள தொடர்பு டைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.



