திருவெண்ணெய்நல்லூர், மார்ச் 20 –
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவெண்ணெய்நல்லூர் பி.டி.ஒ., அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் என் வாக்கு என் உரிமை என்னும் தலைப்பில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு வட்டார இயக்கம் மேலாளர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். விழுப்புரம் நிதி உள்ளாக்கம் உதவி திட்ட அலுவலர் கமலவல்லி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
பி.டி.ஒ., அலுவலகத்தில் தொடங்கிய பேரணி கடைவீதி வழியாக சென்று புதிய பேருந்து நிலையம் வரை சென்றடைந்தது. அப்போது வழி நெடுகிலும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாசலம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தர்ராஜன், பிரபாகரன் உள்ளிட்ட மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



