தஞ்சாவூர், ஜூன் 30 –
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியத்தின் 17ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.அய்.சுப்ரமணியம் நினைவிடத்தில் துணைவேந்தர் குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமையில், பதிவாளர் பொறுப்பு பன்னீர் செல்வம் முன்னிலையில் மாலை அணிவித்து, மலர்த் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மொழி பெயர்ப்பு துறைத் தலைவரும், மக்கள் தொடர்பு அலுவலருமான பொறுப்பு முருகன், சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை தலைவர் கவிதா, தூய்மை பிரிவு மேற்பார்யாளர் சுகுமாரன், பல்க லைக்கழக தலைமை காவலர் பொறுப்பு வேலுசாமி, தோட்ட பிரிவு மேற்பார்வையாளர் சேவியராஜ், அலுவலக நிலைப்பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



