நாகர்கோவில், நவ. 26 –
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அரசியல் சாசன நாளில் அரசியல் சாசன சட்டத்தை குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்வை நடத்தினர்.
பள்ளி பேரவையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வழிகாட்டலில் மாணவர்கள் அரசியல் சாசன சட்டத்தின் முகப்புரையை தமிழிலும் ஆங்கிலத்திலும் சேர்ந்து வாசித்தனர். ஆசிரியர் தொடக்க உரையாற்றினார். பள்ளியின் தாளாளர் தலைமை தாங்கி அரசியல் சாசன தினம் குறித்த உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
பின்னர் மாணவர்கள் பொன்னப்ப நாடார் நகர் சந்திப்பிலிருந்து இராமன்புதூர் கலுங்கு சந்திப்பு வரை மனித சங்கிலியாக கைகோர்த்து நின்றனர். நீதி, சமத்துவம், சகோதரத்துவம், இறையாண்மை, கல்வி உரிமை, வேற்றுமையில் ஒற்றுமை என்பன போன்ற பதாகைகளை ஏந்தி நின்று பொதுமக்களுக்கு அரசியல் சாசன சட்ட முகப்புரை குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



