கோவை, செப். 20 –
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண்.52 மற்றும் 53க்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காமராஜர் சாலை, மணி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு உடனடி ஆணைகளை வழங்கினார்.
உடன் கிழக்கு மண்டல தலைவர் திருமதி. இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்,உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, மாமன்ற உறுப்பினர் திரு.மோகன்,உதவி செயற்பொறியாளர் திரு. ராஜேஷ்கண்ணா, மண்டல சுகாதார அலுவலர் திரு.ராஜேந்திரன், உதவி பொறியாளர் திரு.ஃபர்மான் அலி, சுகாதார ஆய்வாளர் திரு.ஜெரால்டு சத்யபுனிதன், 53வது மாமன்ற உறுப்பினர் எம் டி மோகன், செந்தமிழ் செல்வன், மாவட்ட பிரதிநிதி சு தனபால், கலைச்செல்வி தன்ராஜ்,சிவகுமார் ராம்தாஸ்,மகேஷ் பாபு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



