தருமபுரி மாவட்டம் இலக்கிய பட்டி ஊராட்சி யில் உள்ள 15-வது வார்டு அழகாபுரி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மின் கம்பம், குடிநீர் வசதி, சாலை வசதி ஆகிய தேவைகளை வலியுறுத்தினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி பொதுமக்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.இந்த ஆய்வின்போது மேற்கு ஒன்றிய செயலாளர் டி. எல். காவேரி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் கௌதம், மேற்கு ஒன்றிய பொருளாளர் தண்டபாணி, மாவட்ட துணை அமைப்பாளர் கௌதம், இளைஞர் அணி சதீஷ்குமார், முரளி, கிளை நிர்வாகிகள் மணிகண்டன், முரளி, முருகன், கிருஷ்ணன், அணியின் அமைப்பாளர்கள் உதயசூரியன், வினோத் ,கண்ணன், இலக்கியம்பட்டி ஊராட்சி செயலாளர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



