தஞ்சாவூர், மே 11 –
தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கிக் கொள்ளப்பட்டதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததை தொடர்ந்து நடத்தை விதிமுறைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன. எனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம், இதர சிறப்பு குறை தீர்க்கும் கூட்டங்கள் இனி மேல் தொடர்ந்து நடைபெறும் என்றார்.



