தருமபுரி மாவட்ட புரட்சிக்கர சோஷலிஸ்ட் கட்சி சார்பில் வேடியப்பன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பென்னாகரம் வட்டம், அரகாசனஅள்ளி கிராமத்தில் வசிக்கும் தமிழரசனின் நிலத்தை அளக்காமல் பல ஆண்டுகள் அலைக்கழிப்பு, பாதிக்கப்பட்ட தமிழரசன் மீது காவல்துறை பொய் வழக்கு, அரகாசனஅள்ளி மக்களின் நலன்களை பாதுகாக்கவும் ,ஏழை விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் கிராம உதவியாளர் கோவிந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கவும், அவருக்கு துணை போகும் விஏஓ நில அளவையர்கள் பென்னாகரம் வட்டம் வருவாய் துறையின் மீது விசாரணை கோரி தமிழ்நாடு அரசு வலியுறுத்தி புகழேந்தி மாவட்ட செயலாளர் கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாது, பார்வதி, ரவி, பிரியா, தமிழரசன், பழனியம்மாள், மணி, லட்சுமி மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கிருஷ்ணன் மாவட்ட குழு உறுப்பினர் நன்றியுரை ஆற்றினார்.



