தருமபுரி, மே 08 –
தருமபுரி நகரில் உள்ள செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் +2 பொதுத்தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். இந்தப் பள்ளியின் மாணவி ஹரிவாஷினி 597 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், பள்ளி அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
அதேபோன்று பள்ளியின் மாணவன் கௌதம் 594 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடமும், மாணவி நேனுகுமாரி, லட்சுமி பிரபா ஆகியோர் 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். 590 மதிப்பெண்களுக்கு மேல் 4 மாணவர்களும், 580 மதிப்பெண்களுக்கு மேல் 11 மாணவர்களும், 570 மதிப்பெண்களுக்கு மேல் 24 மாணவர்களும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 45 மாணவர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 58 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 166 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கணிதம் 1, உயிரியல் 1, கணினி அறிவியல் 5, கணக்கு பதிவியல் 3, பொருளியல் 4, வணிகவியல் 5, கணினி பயன்பாடு 1 நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவிகள் தொடர்ந்து ஐந்தாவது வருடமாக +2 பொதுத்தேர்வில் மாவட்ட மற்றும் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனை படைத்த மாணவ, மாணவிகளை செந்தில் பள்ளி நிறுவனங்களில் தலைவர் செந்தில் கந்தசாமி, சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கி பாராட்டினார். செந்தில் குழுமத் துணைத் தலைவர் மணிமேகலை, செந்தில் குழுமங்களின் செயலாளர் தனசேகர், நிர்வாக அலுவலர் ரபிக் அஹமத், முதல்வர் வள்ளியம்மாள், முதல்வர் (நிர்வாகம்) ஓங்காளி, மேல்நிலை பிரிவு முதல்வர் திருநாவுக்கரசன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.



