திருச்சி, மே 7 –
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழா வரும் மே 14ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், மே 23ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.



