நாகா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியின் கொலு மண்டபத்தில் விஜயதசமி வித்யாரம்பத்தில் மழலையர் மாணவர்கள் சேர்க்கை மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோவில் குருநாதர் மோகன் சாமி மழலையர்களுக்கு ஓம் அனா ஆவன்னா…. என்று கையைப் பிடித்து எழுதினார். முதல்வர் வனிதா வரவேற்றார். பள்ளி தாளாளர் வெண்மதிநாதன் நன்றி கூறினார்.



