களியக்காவிளை, நவ. 25 –
குழித்துறை கல்லுகெட்டியில் வைத்து முதியவரை அடித்து உதைத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். குழித்துறை கல்லுகெட்டியில் மணி என்பவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பொருட்கள் வாங்க பூவன் விளை பகுதியை சார்ந்த பாலகிருஷ்ணன் (60) வந்துள்ளார்.
அப்போது நித்திரவிளை பகுதியை சார்ந்த சுந்தரம் மகன் வின்ஸ் (30) மணியின் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு ரூபாய் கொடுக்கவில்லை. இதனால் கடைக்காரர் மணிக்கும் வின்ஸ்க்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனை முதியவர் பாலகிருஷ்ணன் தட்டி கேட்டுள்ளார். அப்போது வின்ஸ் முதியவர் பாலகிருஷ்ணனை அடித்து உதைத்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணனை அப்பகுதியினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிட்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிட்சை அளித்து வருகின்றனர். இத்தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து வின்சை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



