திருச்சி, ஜூன் 8 –
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பள்ளிவயல் கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது கதண்டுகள் தாக்குதல் நடத்தியதில் 13 பெண்கள் உட்பட 17 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



