விளாத்திகுளம், ஏப்ரல் 25 –
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும் திருவிழாக்கள் நடத்தப்படும் போது ஒவ்வொரு நாளும் ஒரு மண்டபகப்படிதாரர்கள் சார்பில் விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அனைத்து சமூக மக்களும் விழாக்களில் பங்கு பெற வேண்டும் என்பதற்காக தொடக்க காலத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தனிநபர் சமூக சார்ந்த அமைப்புகள் சார்பில் தான் மண்டகப்படி நடப்பது வழக்கம்.
ஆனால் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சுந்தரேஷ்வரர் திருக்கோவிலில் மட்டும் தான் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை, ஊராட்சிதுறை, தீயணைப்புத்துறை மின்சாரத்துறைக்கு என விழாக்கள் நடத்துவதற்கு மண்டகப்படி வழக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்பொழுது மீனாட்சியம்மன் கோவிலில் 6 ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5 ஆம் திருநாளான காவல்துறை மண்டபகப்படி என்பதால் காவல்துறை சார்பில் திருவிழா என்பதால் பெரும்பாலான ஆண் காவலர்கள் வேஷ்டி சட்டை அணிந்தும், பெண் காவலர்கள் புடவை அணிந்தும், செண்டை மேளம் முழங்க பட்டாசு வானவேடிக்கையுடன் காவல் நிலையத்திலிருந்து ஊர்வலமாக கோவிலுக்கு நடந்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றது. இதன் பின்னர் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெற்றது. விழாவில் விளாத்திகுளம் டி.எஸ்.பி. சுந்தரபாண்டியன், ஆய்வாளர் சக்திவேல், விளாத்திகுளம் துணைக் காவல்கண்காணிப்பு அலுவலகத்துக்கு உட்பட்ட ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர்களுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
மேலும் பூஜை பிரசாதம் காவலர்களுக்கு வழங்கப்பட்டது. போலீசார் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
காவல்துறை மண்டகபடியை முன்னிட்டு விளாத்திகுளம் காவல் நிலையம் முன்பு வாழை மரம் நடப்பட்டு, மின்விளக்குகளினால் அலங்காரம் செய்யப்பட்டு ஜெகஜோதியாக காட்சியளித்து
அதனைத் தொடர்ந்து திருவிழாக்கு வந்திருந்த பக்தகோடிகள் அனைவருக்கும் காவல்துறை சார்பில் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.



