திருச்சி, மே 25 –
தமிழக அரசு பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக டோங்ரே பிரவீன் உமேஷ் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றங்கள் நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.



