இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. மூன்றாம் நாளான நேற்று பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுவதை மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார். முகாமில் பொதுமக்களிடமிருந்து 87 மனுக்கள் பெறப்பட்டு 7 நபருக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டது. கடலாடி வட்டாட்சியர் ரங்கராஜன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.



