By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பயிர் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது: ஈரோடு ஆட்சியர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பயிர் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது: ஈரோடு ஆட்சியர் தகவல்
ஈரோடுதமிழ்நாடு

பயிர் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது: ஈரோடு ஆட்சியர் தகவல்

Last updated: July 17, 2026 5:15 pm
July 17, 2026
2 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 17 –

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் போது தெரிவித்ததாவது: ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 768 மிமீ ஆகும். நடப்பு ஆண்டில் 17.07.2026 முடிய 209.4 மி.மீ பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 59.62 அடியாகவும். 7.13 மி.கன அடிநீர் இருப்பும் உள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் மற்றும் இதர இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், பயிர் சாகுபடிக்குத் தேவைப்படும் பூச்சிமருந்துகள் மற்றும் இரசாயன உரங்கள் ஆகியவை போதுமான அளவுக்கு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பி.எம்.கிசான் பயனாளிகள் அனைவரும் தனித்துவ அடையாள எண் பெறுவது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை தொடர்ந்து கிடைத்திட இதுநாள் வரை தனித்துவ அடையாள எண் பெறாத பயனாளிகள் தங்கள் வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், பி.எம்.கிசான் கணக்குடன் நிலம் தொடர்பான விபரங்களை இணைத்தல், ஆதார் விபரங்களை வங்கிக் கணக்குடன் இணைத்தல் மற்றும் தங்களது அடையாளத்தை இணைய வழியில் உறுதிபடுத்துதல் போன்ற விபரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டு அத்திட்டத்தின் பயன்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தோட்டக்கலைத்துறையின் சார்பாக கருத்து கண்காட்சியினை அவர் பார்வையிட்டார். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, 200 கோரிக்கை மனுக்கள் பெற்று மேல் நடவடிக்கைக்காக உரிய அலுவலர்களிடம் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .சாந்தகுமார், வேளாண்மை இணை இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், ஈரோடு வேளாண் விற்பனைக்குழு செயலாளர் கலைச செல்வி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வரலாற்று சின்னமான பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுச்சுவர் புதுப்பிக்கப்படும்: ஆய்வுக்கு பின் அமைச்சர் தகவல்
குமரி மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலா தலங்களில் கலெக்டர், அமைச்சர் ஆய்வு
பெருந்துறை கோபியில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு
திருவெண்ணெய்நல்லூர் அருகே கார் மோதி முதியவர் பலி
மார்பக புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தின தமிழ் செய்தி எதிரொலி

September 17, 2024
111 Views
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் துவக்க விழா
இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் ஆணை
நித்திரவிளை கடற்கரையில் மது அருந்திய 6 வாலிபர்கள் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account