நாகர்கோவில், மார்ச் 23 –
கன்னியாகுமரி மாவட்டதில் தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தோவாளை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தில் இளைஞர்கள் அதிக அளவில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் முன்னிலையில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இந்த இணைப்பு விழாவானது தோவாளை ஒன்றிய செயலாளர் ஏ.கே. விஜய் தலைமையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் இணைச் செயலாளர் பிரேம், தோவாளை ஒன்றிய செயலாளர் ஹரி மற்றும் விஜு, ரூபன், அஜித், முகேஷ், சுந்தர்ராஜ் பலர் கலந்து கொண்டார்கள்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாற்று அரசியல் மாற்றத்தை நோக்கி இளைஞர்கள் தவெகவில் இணைவது குமரி மாவட்டத்தில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



