சத்தீஸ்கர், நவ. 4 –
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோர்பா பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் அறிந்து வந்த ரயில்வே போலீசார் மற்றும் பிலாஸ்பூரில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டு உள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரவில்லை. சரக்கு ரயில் நிற்கும் அதே தண்டவாளத்தில் எப்படி பயணிகள் ரயில் வர அனுமதிக்கப்பட்டது? இது மனித தவறால் நடந்ததா? அல்லது சிக்னல் கோளாறு காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



