மதுரை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் கன்னிசேரி புதூர், மேலச்சின்னையாபுரத்தில் உள்ள மதன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தொழிலாளர்களிடம் அவர்களது கோரிக்கை மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், சட்டமன்ற உறுப்பினர் எ.ஆர்.ஆர்.சீனிவாசன், மாவட்ட ஆட்சித் தலைவர் வீ.ப. ஜெயசீலன், முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் கந்தசாமி, தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் ஆனந்த், மதன் பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் நாகராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக விருதுநகர் அரசு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றபோது, பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



