மதுரை மாவட்டம், ஜூன் 25 –
மதுரை மாநகர காவல் ஆணையராக S.ராஜேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 1998 ம் ஆண்டு குரூப் -1 தேர்வில் காவல் துணை கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்து தொடர்ந்து 2007 ஆம் வருடம் காவல் கண்காணிப்பாளராகவும் 2012 ஆம் ஆண்டு இ.கா.ப நிலை பெற்று 2019 சென்னை மாநகர பூக்கடை துணை ஆணையராகவும், 2020 காவல்துறை துணை தலைவராக பதவி உயர்வு பெற்று மதுரை சரக காவல்துறை துணைத் தலைவராகவும், நெல்லை மாநகர காவல் ஆணையராகவும் பணியாற்றி, அதன்பின் காவல்துறை தலைவராக 2024-ல் பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



