வேலூர், ஆகஸ்ட் 23 –
வேலூர் மாவட்டம், வேலூர் நகர அரங்கத்தில் சிம்கோ கூட்டுறவு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கேவிஐசி மற்றும் சிம்கோ இணைந்த 20 பயனாளிகளுக்கு இலவச தையல் உபகரணங்கள் வழங்கினர். உதவி மேலாளர் கார்த்திகேயன், வரவேற்புரையாற்றினார்.
உடன் தமிழ்நாடு சஹாகர் பாரதி, மாநிலத் தலைவர் சுபாஷ், திருவண்ணாமலை மாவட்டம் உதவி இயக்குனர் இமயவர்மன், நேப்கோ தலைவர் கார்த்திகேயன், பெருமாள் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கோடீஸ்வரன், 49-வது வார்டு மாமன்ற உறுப்பினர் லோகநாதன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர்.
சிம்கோ தலைவர் அமுதா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவாக சிம்கோ கிளை மேலாளர் நவீன் குமார் நன்றிரையாற்றினார். சிம்கோ கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



