திருவெண்ணெய்நல்லூர், மார்ச் 03 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மேலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் செல்வமணி (45). இவர் கூலி விவசாயி. இவர் நேற்று சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பேரங்கியூர் கூட்ரோட்டில் தேசிய சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் செல்வமணி மீது மோதி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


