வேலூர், பிப். 10 –
மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதோடு, குற்றம் நடக்காமல் தடுக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது தனி கவனம் செலுத்தப்படும் என பேட்டி
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த மயில்வாகனன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய SP யாக சேலம் மாநகராத்தில் துணை காவல் ஆணையராக பணியாற்றி வந்த சிவராமன் IPS அவர்கள் வேலூர் SP யாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் : மாவட்டத்தில் சட்டம் ஒழுங்க பாதுகாக்கவும், தடுக்கவும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். மேலும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செய்யல்கள் மீது தனி கவனம் செலுத்தப்படும். தண்டனைக்குறிய குற்றமாக இருந்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
போதை ஒழிப்பில் கவனம் செலுத்தப்படும். வேலூர் மாநில எல்லையாக இருப்பதால் அங்கு கூடுதலாக ஒரு சோதனைச்சாவடியை நியமித்து, கூடுதல் காவலர்களை நியமிக்க இருப்பதாகவும். பொது மக்கள் சட்டம் ஒழுங்கை பின்பற்ற வேண்டும், பொது மக்களின் புகாரை தீர்க்க என் நேரமும் SP அலுவலகம் திறந்த கிடக்கும், ஒரு புகாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் புதிய SP சிவராமன் கூறினார்.



