நெல்லை, மார்ச் 27 –
உலக வன நாள் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வன சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக இணை இயக்குநரும், வன உயிரின காப்பாளருமான ஸ்ரீகாந்த் உத்தரவின் பெயரில் அம்பாசமுத்திரம் வனச் சரகர் கவின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (22.03.2026) அன்று மணிமுத்தாறு அணை வன பேச்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாபர் தலைமையிலான தன்னார்வலர்கள் வனப் பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் மது பிரியர்கள் விட்டுச் சென்ற 540 கிலோ காலி மது பாட்டில்கள் மற்றும் பொதுமக்கள் விட்டுச் சென்ற 260 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை ஒரே நாளில் கண்டெடுத்து அவற்றை அப்புறப்படுத்தினர். இந்தப் பணியின் போது குமரி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் பாபு, சண்முகம், மாகின், ஜேம்ஸ், மாலிக், சங்கர், அய்யனார், சரவணகார்த்திக், பிரதீப், ஜெயன், பிரின்ஸ் உட்பட்ட சரக வன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



