By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது
தமிழ்நாடுதேனி

தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது

Last updated: May 29, 2026 6:04 pm
May 29, 2026
21 Views
Share
SHARE

தேனி, மே 29 –

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் (29.05.2026) நடைபெற்றது. மாவட்டத்தில் மே மாதம் வரை ஆண்டு மழையளவான 276.6 மி.மீ-க்கு தற்பொழுது வரை 200.03 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. இது மே மாதம் வரை ஆண்டு இயல்பான மழையளவில் 76.57 மி.மீ குறைவாகும். மே 2026 மாதத்திற்கான இயல்பு மழையளவான 64.5 மி.மீ-க்கு தற்பொழுது வரை 88.06 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. இது மே மாத இயல்பான மழை அளவை காட்டிலும் 23.56 மி.மீ அதிகமாகும்.

தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு நெல் 380 ஹெக்டர் பரப்பிலும், சிறுதான்யம் 54 ஹெக்டர் பரப்பிலும், பயறு வகைகள் 115 ஹெக்டர் பரப்பிலும், தோட்டக்கலை பயிர்களான பழப்பயிர்கள் 7366 ஹெக்டர் பரப்பிலும், காய்கறி பயிர்கள் 146 ஹெக்டர் பரப்பிலும், மலைத்தோட்ட பயிர்கள் 11044 ஹெக்டர் பரப்பிலும், நறுமணப்பயிர்கள் 1738 ஹெக்டர் பரப்பிலும், மலர்ப்பயிர்கள் 525 ஹெக்டர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் விதை 71 மெ.டன்னும், சிறுதானியங்கள் 6 மெ.டன்னும், பயறு வகை விதைகள் 9 மெ.டன்னும், எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் 1.2 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. துவரை பயிரானது நடவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சாகுபடி செய்யும் பொழுது மகசூல் அதிகரிக்கும் என ஆய்வுகள் முடிவுகள் தெரிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, நடப்பாண்டு தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் நடவு தொழில்நுட்பம் மூலமாக துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூபாய் 10,000 வரை மானியம் வழங்கப்பட உள்ளது.

தேனி மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் கௌரவ நிதி பெரும் திட்டத்தின் கீழ் மொத்தம் உள்ள 26050 பயனாளிகளில் இதுவரை 23,550 பயனாளிகள் மட்டுமே விவசாய அடையாள எண் பெற்றுள்ளார்கள். மீதமுள்ள பிற விவசாயிகளும் கௌரவ நிதித்திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயனடைய உடனடியாக விவசாய அடையாள எண்ணை பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும் 15 நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும் என்றும், டி.ஏ.பி மற்றும் பொட்டாஷ் உரங்கள் அனைத்து கடைகளிலும் இருப்பு வைக்கப்படும் என்றும், உரங்களின் விலை கூடுதலாக விற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து வரப்பெற்ற மனுக்களுக்கு உரிய பதிலினை விவசாயிகளுக்கு வழங்கிட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், மாவட்ட வன அலுவலர் ஜி.கிரண், உதவி வன பாதுகாவலர் சாய்சரண் ரெட்டி வேளாண்மை இணை இயக்குநர் சாந்தாமணி, இணைப்பதிவாளர் (கூட்டுறவு) திருமதி நர்மதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெரால்டு அலெக்சாண்டர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) இரா.வளர்மதி, பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகராட்சியில் தெரு நாய் பிரச்சனை மற்றும் குடிநீர் பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்: மாமன்ற கூட்டத்தில் (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா உறுதி
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத சனி மகா பிரதோஷம்
நெடுங்கல் அருகே என்.மோட்டூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
குமரி மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் கலந்தாய்வு
யுவராஜா பவுண்டேசன் சார்பில் பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

புகையிலை இல்லா இளைஞர் பிரச்சார பேரணி 2.0

September 27, 2024
61 Views
106 நபர்கள் பங்கேற்ற கராத்தே மாபெரும் உலக சாதனை
யுவ பாரதி பள்ளி 2 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்
ஜனாதிபதி விருது பெற்ற ஊட்டியை சார்ந்த காவல் அதிகாரி
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account