தருமபுரி, ஜூலை 11 –
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அண்ணாமலை துவக்கியுள்ள “We The Leaders” அமைப்பு சார்பில் போதை இல்லா தருமபுரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி டெல்லி பழனிவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த பேரணிக்கு சிறப்பு அழைப்பாளராக கரு. நாகராஜன் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார்.
பாப்பிரெட்டிப்பட்டியில் ஸ்டான்லி பள்ளி அருகில் இருந்து துவங்கிய பேரணி பேருந்து நிலையம் வரை நடைபெற்ற பேரணியில் போதை ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கோசங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதைதொடர்து சாமியாபுரம் கூட்ரோட்டு தனியார் மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் தமிழ்மணி, வேலுமணி, சிவகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் சாய்சத்யன், ராஜா, கிருஷ்ணாசாய், சிமோன் கிறிஸ்டி, கார்த்திக், பிரபு, கடத்தூர் குமார், சுக்ரி, சத்திவேல், மணி கல்பனா, வடபழனி ராஜா, சிவன், ராம் உள்ளிட்ட ஏராலமானோர் கலந்து கொண்டு போதை இல்லா தருமபுரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.



