கன்னியாகுமரி, நவம்பர் 03 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை எழில் மிகுந்த காளிகேசம் அருள்மிகு காளிஅம்மன் கோவிலில் (05-11-2025) புதன்கிழமை, ஐப்பசி மாத பௌர்ணமி பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது. அன்று காலை 7.00 மணிக்கு பக்தி இசை,
காலை 9.00 மணிக்கு ராஜமேளம், 09.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 10.00 மணிக்கு உலக நன்மைக்காக பரசேரி சியாமளா விஸ்வேஸ்வரன் தலைமையில் ஶ்ரீலலிதா சகஸ்ரநாம பூஜையும், பகல் 11.30 மணிக்கு சிவபெருமானுக்கு அன்னாபிஷேகமும், 12.00 மணிக்கு நாதஸ்வர மேளம், மதியம் 1.00 மணிக்கு அலங்கார தீபாராதனை, 1.30 மணிக்கு அன்னதானமும், அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்குதல் நடைபெற இருக்கின்றன.
பௌர்ணமி பூஜையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து காளிகேசத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பௌர்ணமி பூஜை வழிபாட்டுக்குழு மற்றும் காளிகேசம் அருள்மிகு காளிஅம்மன் திருக்கோவில் சேவா அறக்கட்டளை நிர்வாக குழுவினரோடு பக்தர்களும சேர்ந்து செய்கிறார்கள்.



