தருமபுரி, பிப்ரவரி 04 –
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கெரகொடஹள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வரும் லாரி, கார்களில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோலை எடுத்து முறைகேடாக விற்பனை செய்து வந்த சுப்ரமணி (63) என்பவரை குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி – சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே டீசல் மற்றும் பெட்ரோலை முறைகேடாக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் துறை இயக்குனர் பாலநாகதேவி மற்றும் காவல்துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவின் பேரில் காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் மேற்பார்வையில் துணை காவல் கண்கணிப்பாளர் சேலம் சரகம் பி.எஸ்.ரமேஷ்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் இளவேந்தன், சிறப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் தலைமை காவலர் சுரேஷ், வினோத் உள்ளிட்ட காவலர்கள் அப்பகுதியில் தீவிர விசாரணை செய்ததில் கெரகொடஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவரது வீட்டில் முறைகேடாக எடுத்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 லிட்டர் டீசல் மற்றும் 6 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.



