சென்னை, மார்ச் 03 –
‘எஸ்பிஐ கிரீன் மாரத்தான் சீசன்-6’ கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் நடைபெற்றது. லக்னோ, சண்டிகர், போபால், விசாகப்பட்டினம், பெங்களூரு, கவுகாத்தி, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட 17 நகரங்களில் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்குவதில் சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறது.
சென்னையில் நடைபெற்ற மாரத்தான், “பசுமையான இந்தியாவுக்கான ஓட்டம்” என்ற மாரத்தானின்” நோக்கமாக பிரதிபலித்தது. அனுபவமிக்க ஓட்டப்பந்தய வீரர்கள், மாணவர்கள், குடும்பங்கள், கார்ப்பரேட் குழுக்கள், உடற்பயிற்சியையும், உடற்தகுதியையும் ஊக்குவிக்கும் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட 4,000-க்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தான் ஓட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் விவேகானந்த் சௌபே, மின்னணு வலைதள பொதுமேலாளர்கள் எம்.வி. ஆர் முரளி கிருஷ்ணா, ஜோபி ஜோபி ஜோஸ் எஸ். ஹரித பூர்ணிமா, சென்னை சி.ஏ.ஜி பொதுமேலாளார் சீனிவாச ராவ் வல்லம்செட்டி, மற்றும் சிசிஜிஆர்ஒ பொது மேலாளர்சீனிவாசராவ் ஜொன்னலகட்டா ஆகியோர் இந்த மாரத்தான் நிகழ்வில் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வு சுற்றுச்சூழலுக்கு முதலிடம் என்ற தனது கொள்கைக்கு ஏற்பு எஸ்பிஐ கிரீன் மாரத்தான் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு கவனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த ஓட்ட அனுபவத்தை வழங்கியது.



