திருச்சி, ஏப்ரல் 25 –
கடந்த 2020ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் 661 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் வெளிநாடு தப்பிச் சென்ற ராமதாஸ் என்கிற கருப்பபாண்டி, சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வருவதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவரை திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



