By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலையில் நீர் நிரம்பிய பள்ளம்: மதில் சுவர்களை பிடித்து கடந்து செல்லும் மாணவர்கள் : விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாலையில் நீர் நிரம்பிய பள்ளம்: மதில் சுவர்களை பிடித்து கடந்து செல்லும் மாணவர்கள் : விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சாலையில் நீர் நிரம்பிய பள்ளம்: மதில் சுவர்களை பிடித்து கடந்து செல்லும் மாணவர்கள் : விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி

Last updated: October 29, 2025 6:36 pm
October 29, 2025
61 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 29 –

நாகர்கோவில் மாநகரில் சிறு மழைக்கே தாக்குபிடிக்க முடியாத சாலைகள்; விழுந்து, எழுந்து செல்லும் வாகன ஓட்டிகள் அல்லல் படும் மாநகர மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர் பல விபத்துகளும் தினந்தோறும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு கிரைஸ்ட் சர்ச் அருகே உள்ள சாலை பல வருடங்களாக குண்டு குழியுமாக உள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. மேலும் மக்கள் வரிப்பணத்தில் சொகுசு கார்களில் அதிகாரிகள் வலம் வருவதால் என்னவோ இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் போன்றவர்களின் கஷ்டம் இவர்களுக்கு புரிவதில்லை.

ஏற்கனவே இந்த பகுதியில் சாலை ஓரத்தில் வடிகால் ஓடை இருந்துள்ளது ஆனால் தற்போது தார் சாலை அமைக்கும்போது வடிகால் ஓடையை அடைத்து சாலை அமைக்கப்பட்டதால் மழை காலங்களில் மழைநீர் வடிந்து செல்ல முடியாமல் தண்ணீர் தேங்கி சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் தினம்தோறும் விபத்துகளும் ஏற்படுகிறது.

இந்த சாலை வழியாகத்தான் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், அவசர மற்றும் அத்தியாவசிய தேவைக்காக செல்பவர்கள் போன்றவர்கள் செல்ல வேண்டி உள்ளது. எனவே உடனடியாக சாலையில் மழைநீர் தேங்காதபடி சாலை ஓரத்தில் ஓடை அமைத்து பழுதாகி காணப்படும் சாலையை செப்பணிட்டு பொதுமக்கள் சிரமமின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும். மேலும் இப்பகுதியில் உள்ள சாலையில் தண்ணீர் தேங்கி சாலை சேதலமடைந்து வருவதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தின தமிழ் காலை நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.

இருப்பினும் இப்பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதியும், மாநகராட்சி அதிகாரிகள், ஆணையர், மேயர் போன்றவர்கள் இப்பகுதியை பார்வையிடாமல் அலட்சியம் காட்டியதன் விளைவு தினம்தோறும் இப்பகுதியில் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் பள்ளி குழந்தைகள் அருகிலுள்ள மதில் சுவர்களைப் பிடித்துக் கொண்டு இப்பகுதியை கடந்து செல்வது பார்ப்போரை வேதனையடைய செய்துள்ளது. எனவே
மாநகராட்சி இதில் முழு கவனம் செலுத்தி இதுபோன்று பழுதடைந்து காணப்படும் சாலைகளை கண்டுபிடித்து செப்பனிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி உண்ணாவிரத போராட்டம்
கரிய மணிக்கத்தாழ்வார் திருக்கோயில் கும்பாபிஷேக பணி
திருவட்டாறு அருகே சொத்துக்கு பணம் வாங்கி மோசடி: கேரளாவை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு
தூங்கிக் கொண்டிருந்தவரின் செல்போன், பணம் திருட்டு. திரும்பி வந்து கொள்ளையர்கள் செய்த சம்பவதால் அதிர்ச்சி.
மலங்கரை கத்தோலிக்க ஆலய சமூக நல்லிணக்க ஊர்த்திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வழக்கறிஞருக்கு ஐகோர்ட்டு கிளை ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு

July 15, 2024
90 Views
தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சாலைகளில் நடைமுறைப்படுத்தி வரும் நாகர்கோவில் மாநகராட்சி: பொதுமக்கள் குற்றச்சாட்டு
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் மலைமுருகனுக்கே சொந்தம்
தென்காசியில் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account