ஈரோடு, மே 28 –
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி பிரியாணி அரிசி மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை நேரத்தில் சட்ட சபை தேர்தல் நடந்ததால் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பிரியாணி அரிசி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 22 வது ஆண்டாக மத நல்லிணக்க நிகழ்ச்சியாக பிரியாணி அரிசி மற்றும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு ஆர் கே வி ரோட்டில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் சாதிக் அலி தலைமை தாங்கி 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு பக்ரீத் பண்டிகையை ஒட்டி பிரியாணி அரிசி மற்றும் பொருட்களை வழங்கினார்.
இதில் மாவட்ட பொருளாளர் ஆல்ட்ரின் ராஜேஷ், மாவட்ட துணை செயலாளர் தம்பி முருகானந்தம், பெருந்துறை தொகுதி மாவட்ட செயலாளர் விஜய பாலன், குமார் பாளையம் தொகுதி மாவட்ட செயலாளர் கதிர் வேந்தன், தேர்தல் பணிக்குழு பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



